Wednesday, August 13, 2008

இயற்கை

நிறங்களின் இனச் சேர்கை இயற்கை
ஓவியனின் கை வண்ணத்தில்
வண்ணங்களாய் மாறி இருக்கிறது

எண்ணங்களின் மனச் சேர்கை
நம் இருவரின் ஒத்த அலைவரிசையில்
நட்பாய் மலர்ந்து ஜொலிக்கிறது

பார் அந்த மேகத்தை
ஒரு தோழி போல் மலை மீது
முழுதுமாய் வியாபித்து இருக்கிறது

மௌனமாய் தவழ்ந்து ஓடும்
அந்த நதியில் உன் முகம்
தெரிவதாய் எனக்கு படுகிறது

No comments: