அன்றொரு நாள் கடற்கரையில்
அலை ஓரம் நின்றிருந்தேன்
மெல்லிய தென்றல் காற்று என் முகம் தடவி
குசலம் விசாரித்துச் சென்றது
இடைவிடாமல் கடல் அலைகள்
என் பாடம் நனைத்து விட்டுப் போயின
சட்டென்று உன்னை பற்றிய நினைவுகள்
என் மனமெங்கும் வியாபித்தன
தொடர்ந்து எனைத் தீண்டும் கடல் அலை போல
இடைவிடாமல் உன் நினைவுகள்
என் மனதில் தோன்றின
என் உடலும் உள்ளமும் குளிர்ந்து
நான் அசைவற்று நின்றிருந்தேன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment