Tuesday, February 2, 2010

புகழ்ச்சி

பரந்து விரிந்திருந்த உன் கவிதைப் புல்வெளிகளில்
ஆசை தீரப் படுத்திருந்தேன்
உன் எண்ண ஓட்டங்களின் வெள்ளப் பெருக்கில்
முழுதுமாய் நனைந்திருந்தேன்
உன் வார்த்தை விளையாட்டின் ஜாலங்கள் கண்டு
எனை மறந்து வியந்திருந்தேன்
அத்தனையும் படித்த உடன் புகழ்ந்து பேச
தமிழில் சொற்களை தேடி அலைந்து
மூர்ச்சை அடைந்தேன்

No comments: